Thursday, December 8, 2011

கவிதைகள் அற்று..

எனக்கு உன்னை பற்றி

சொன்ன கவிதைகளை

சேகரிக்க விருப்பமும் இல்லை..

நேரமும் இல்லை..

வெளியில் சொன்ன கவிதைகளை விட

சொல்லாமல் இருக்கும் கவிதையின் எண்ணிக்கை

ஏராளம்..

ஒரு வரியாய் பிறக்கும் கவிதைகள்

பல நீளன்களாய் உருவம்

எடுக்கிறது...ஒரு சிறு கணங்களில்..

ஒரு குளத்தை நிரப்பும்

வெங்காய தாமரையை போல்

உனக்கான கவிதைகள்..

உலக சமுத்திரங்கள எல்லாவற்றையும்

நிரப்புகிறது..

என்று பறக்க மறக்கும் பறவைகள்..

பறவைகளை சிறைபிடித்து
தொடர்ந்து ஆதரிக்கிறோம்
அடிமைத்தனத்தை..
நம்மை விட்டு பறந்து செல்லும்
பறவைகள்
தொடர்ந்து உணர்த்தி கொண்டே
இருக்கிறது
சுதந்திரத்தின் சுகத்தை..

மழையும்..மரமும்..

அடிக்கடி பெய்கிறது
மழை
பல நூற்றாண்டு களாய்..
மழையால் உயிப்பானது மரம்..
ஒவ்வொரு மழைக்கு பின்னும்
மழையின் மிச்சத்தை
தனக்குள் சேகரித்து
மழை போல் பெய்ய
முயன்று கொண்டே இருக்கிறது மரம்..